பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நானும் வர்ரேன்! காட்சி 1 இடம் : கிராமப்புற வீடு...மு ன் பகுதி, காலம் : மாலை உள்ளே : சின்னப்பன், ராமையா, மங்காத்தா. (சின் னப்பன் கையில் அரிச்சுவடி சிலேட்டு புத்தகத்துடன் வீட்டிற்குள் நுழைகிருர், தலைக் குடுமியை அவிைக்கட்டிக் கொண் டிருக்கும் ராமையா. ஆர்ப்பாட்ட த்துடன் அவரை வரவேற்கிருர்). ராமையா : அடடே, சின்னப்பா வா! என்னப்பா இது சினிமா பாட்டுப் புத்தகமா! இது எப்பத்துல இருந்து? வரவர வயசையே மறந்துடுவே போல இருக்குகே. சின்ன : இது பாட்டுப் புத்தகம். இல்ல ராமையா! பாடப் புத்தசம். ஆன்ன ஆவன்ன புத்தகம், இங்க பாரு! அரிச்சுவடி தெவியாதா... ராமையா : என்னது! பேரப்பிள்ளைய தூக்குற வயசலபாடி ப் புஸ்தகமா ஆமா! உன் பையனும் பேரன்களும் தான் காஷ்மீருல இருக்குருங்களே. அங்க கிடைக்காத புஸ்தகமா இந்தப் பட்டிச்காட்டுல கிடைக்குது: கண்ட புத்தசத்தை வாங்கி அனுப்பி, உன் பேரன்களை கெடுத்து டாதேட்பா!