52 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
/ /. 45a60c_Ggaa (Mumps):
இதைப் பொன் னுக்கு வீங்கி நோய் என்றும்
கூறுவார்கள். அல்ட்ரா மைக்ராஸ்கோபிக் வைரஸ் எனும் கிருமிகளால் தாடை நோய் உண்டாக்கப்படுகிறது. பொதுவாக குழந்தைகளுக்கு 5 வயது முதல் 15 வயது வரை வருகிற நோயாக இது இருக்கிறது.
அறிகுறிகள்:
1. தாடையில் உள்ள சுரப்பிகள் வீக்கம் பெற்று, வலியை
உண்டாக்கும்.
2. இதுபோலவே காதுகளுக்கு அடி பாகத்திலும் வீக்கமும்
வேதனையும் மிகுந்திருக்கும். -
தற்காப்பும் தடுப்பு முறைகளும்:
1. நோயாளிக்குப் பூரண ஒய்வு தருவது அவசியம்.
2. குளிர்ச்சியும் ஜலதோஷமும் வராமல் பார்த்துக் கொண்டு, வீங்கிய பாகத்தில் ஒத்தடம் கொடுத்திட வேண்டும்.
3. மற்ற குழந்தைகளிடம் சேராமல், நோயாளிக்
குழந்தையைத் தனிமைப்படுத்திட வேண்டும்.
4. ஏறத்தாழ இந்த நோய் 3 வாரம் வரை நீடித்திருக்கும் என்பதால், எச்சரிக்கையுடன் மருத்துவம் பார்ப்பது நல்லது.
. /2. 6lgaarapc-Gyaa) (Diptheria):
டிப்தீரியா பேசில்லஸ் என்ற நோய்க் கிருமியால் இந்த நோய் ஏற்படுகிறது.