பக்கம்:ஊரார்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

குள் ஒரு கடிதம் இருந்தது. ட்ராமாக்காரிக்கு நாட்டாமைக்காரன் எழுதிய கடிதம். அதைப் படித்த சாமியார் சீ... அசிங்கம்... இப்படியா எளுதுவாங்க?... கடாமாடாட்டம் வயசாச்சு. வூட்லே சம்சாரத்துக்கு நாலு புள்ளைங்க. ...வெளி விவகாரம் வேறே. பெரிய மனிசனாம், நாட்டாமைக்காரனாம். நாம வாயைத் திறக்க முடியுமா! என்னை ஊரை விட்டே துரத்திடுவான். ஒய். விஜயாவைப் பார்த்தார். தன் அகன்ற கண்களை விரித்துச் சிரித்தாள் விஜயா.

ட்ராமாக்காரி புள்ளையாரைச் சுத்றா இந்த நாட்டாமைக்காரன் ட்ராமாக்காரியைச், சுத்தறான். உங்க மாமன் யாரைச் சுத்தறான் தெரியுமாடா குமாரு...."

“தெரியாதே...”


“இதெல்லாம் தெரிஞ்சுக்க உனக்கு வயசு. பத்தாது. வெளியே சொன்னால் வெட்கக்கேடு. ம்...உனக்கெதுக்கு அந்த வம்பெல்லாம்? தெரிஞ்சா துப்பாக்கி கேப்பே... வீரனாயிடுவே. வேணாம். வூட்டுக்குப்போ."

“எங்க மாமா நல்லவராச்சே!"

“குமாரு! ஊரே அப்படித்தான் நம்பிக்கிட்டு இருக்குது. எந்தப் புத்துவே எந்தப் பாம்பு இருக்குதுன்னு எனக்குத்தான் தெரியும்? மாமனை நம்பாதே! ஆளுக்குள்ளே ஆளு. பாக்கப் போன இந்த ஒலகத்திலே எல்லாருமே இரட்டை வேஷக்காரங்க்தான். ஒவ்வொருத்தனுக்குள்ளேயும் இன்னொரு ஆள் இருக்கான். நீ போயிடு. அதோ, உங்க மாமன் வந்துகிட்டிருக்காரு..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/12&oldid=1289414" இலிருந்து மீள்விக்கப்பட்டது