பக்கம்:ஊரார்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15


"ஓகோ!" என்று பல்லைக் கடித்தார் சாமியார். 'அடப்பாவி' என்பது அதன் அர்த்தம்.

"நீங்க மனசு வெச்சாத்தான் முடியும். காலையிலே கருக்கலோட வீட்டுக்கு வந்துடுங்க."

"எள்ளு இருக்கா?"

“மூட்டை மூட்டையா இருக்கு..."

“ஆளாக்கு எள்ளை எடுத்து ராத்திரியே தண்ணீலே ஊறப்போட்டு வை. பனவெல்லம் கொஞ்சம் வேணும்..."

"ஆவட்டும்..." வேதாசலம் திரும்பிப் போய் விட்டான்.

'அயோக்கியன், இவன் என்னைப் பார்த்து பதினாறு வயசு கேட்குதான்னு கேலி பேசறான்... வீதியிலே பெரிய மனுசனாட்டம் உலாத்திக்கிட்டு வீட்டுக்குள்ளே நடத்தற அக்கிரமம்...ம்... பாவம், பாவம், இந்தப் பாவத்துக்கு நான் வேறே ஓடந்தையா?' சாமியார் உறுமினார்.

காலை வேளையில், இருட்டு பிரியாத முன்பே, சாமியார் அந்த வீட்டுக்குள் வந்திருப்பது குமாருக்கு ஆச்சரியமாயிருந்தது.

“டேய், குமாரு! வாசக்கதவைச் சாத்துடா. சாமி இப்படி சோபாவிலே உட்காருங்க. இட்லி சாப்பிடறீங்களா?"

"வேணாம்"

"டீ"

"காப்பி இருந்தா குடுங்க..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/15&oldid=1284210" இலிருந்து மீள்விக்கப்பட்டது