இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மண்ணின் கதை
பாப்பா : நிலமே உந்தன் கதைகேட்க
நெஞ்சம் விரும்புது சொல்லாயோ!
நிலம் : முதலில் இருந்தேன் மலையாக
மடுவில் விழுந்தேன் கல்லாக!
சிதறிப் போனேன் மணலாக
சேர்ந்தேன் பிறகு நிலமாக
ஆறுகள் ஓடத் தரையானேன்
அவைகளை அடக்கக் கரையானேன்!
மாறியே பள்ளம் மேடானேன்
மனிதர்கள் வசிக்கும் வீடானேன்!
தங்கம் தந்தேன் நகைபோட
தானியம் கொடுத்தேன் பசிஓட!
எங்கும் பூக்கள் அசைந்தாட
என்னையே கொடுத்தேன் இசைவாக!
உலகில் உள்ள பொருளெல்லாம்
உங்களுக் காக நான்கொடுத்தேன்'
பலரும் சேர்ந்தே பகுத்துண்டு
பண்பாய் வாழ்வீர் பல்லாண்டு!
22