பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮾ லூயிகி - கால்வினி இவர் மின்சாரத்தின் முன்னுேடி. பழைய காலத்தில் சிந்திக்க முடியாதபடி பொருள்களைப் பற்றிச் சிந்தித்து, அறிவோடு போராடி, உணவு, உறக்கம், உற்ருர், பெற்றேர் என்ற பந்தம் கூட சில நேரங்களில் இல்லாமல், இரவென்றும் பகலென்றும் பாராமல், உலகத்திற்கு ஒளி காட்டிய உத்தமர் களாக வாழ்ந்து, மறைந்தும் மறையாமலும் இருக்கிறர்கள் பலர். சில விஞ்ஞானிகள் ஒன்றைக் கண்டுபிடிக்கவேண்டு மென்று, தொடக்கத்திலேயே அதற்குண்டான காரண காரியங்களை ஆராய்கிருர்கள். சிலருக்குத் தற்செயலாகக் கிடைத்த புதுமைகளை வைத்து ஆராய்கிருர்கள். அந்த வகையில் கால்வினி, பாரடே, ப்ளாங்கின், நியூட்டன் போன்றவர்கள் தற்செயலாக ஏற்பட்டதை வைத்து ஆராய்ந்: தவர்கள். ஜேம்ஸ் வாட், ரைட் சகோதரர்கள் கூட அப்படித் தான், என்று கொள்ளலாம். அந்த விஞ்ஞானிகளின் தொடரில் தேல்ஸ் காலத்தி லிருந்து, கால்வினி, வால்டா, பிராங்க்ளின், கெளலாம்ப், ஒரெஸ்டெட், ஹென்றி, டேவிட், மிக அறிவாளியான மைக்கேல் பாரடே, மேற்சொன்னவர்களுடைய முயற்சி ஆராய்ச்சி எல்லாம் சேர்ந்து, யார் உலகத்துக்கு ஒளி தர பித்தானை அழுத்தினனே, அந்த மைக்கேல் பாரடேயின்