இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மரத்தின் கதை
பூமியில் ஒருவிதை விழுந்தது
பொறுத்தே பலநாள் கிடந்தது!
மாமழை அதன்மேல் பொழிந்தது.
மறுநாள் முளையும் எழுந்தது!
சூரியன் வெப்பம் தந்தது
சுற்றியே காற்றும் வந்தது!
வீரியத் தால்செடி உயர்ந்தது
விரைவில் மரமாய் வளர்ந்தது!
கிளையும் நிழல்தர வந்தது!
கிளர்ந்தே பூக்களும் மிகுந்தது
குலையாய் காய்களும் காய்த்திட
குலுங்கின கனிகள் அசைந்திட!
வந்தே பறவைகள் கத்தின
வாயால் பழங்களைக் கொத்தின!
சிந்தை மகிழ்ந்தே கூவின
சேர்ந்தே கிளைகளில் தாவின!
மனிதரும் வந்தே அமர்ந்தனர்
வாழ்த்தியே நிழலில் உறங்கினர்!
இனிதாய் மரம்போல் பயன்தர
இனிமேல் நாமும் இருப்போமே!
23