இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஓட்டப் பாட்டு
பாடிப்பாடி பயிற்சி செய்தால்
பாட்டுக் காரர் ஆகலாம் !
ஓடிஓடி முயற்சி செய்தால்
ஓட்டக் காரர் ஆகலாம் ?
புத்தகத்தைப் படித்து வந்தால்
புத்தி சாலி ஆகலாம் !
சுத்தமாக வாழ்ந்து வந்தால்
துன்பம் இன்றி வாழலாம் !
பெற்றவர்கள் பேச்சைக் கேட்டால்
பெரியமனிதர் ஆகலாம்!
கற்றவர்கள் போற்று வார்கள்
கேட்டுக் கேட்டு மகிழலாம்!
14