பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேவலைப் பார்

சேவலைப் போல நிமிர்ந்துநட
செல்லும் வழியைப் பார்த்துநட !

குயிலைப் போலே கூவிடுவாய்
குருவியைப் போலே தாவிடுவாய் !
மயிலைப் போலே ஆடிடுவாய் !
மானைப் போலே ஓடிடுவாய் !

ஒன்றாய் வாழ்வது ஒற்றுமையாம்
ஒற்றுமை அன்பின் முற்றுகையாம் !
நன்றாய் வாழ்வது அறிவுடைமை
நலமாய் இருப்பது நம் கடமை !

பணிவாய் இருந்தால் சுகம்கிடைக்கும் !
படித்தே வாழ்ந்தால் புகழ்கிடிைக்கும் !
துணையாய் வாழ்ந்தால் துயர்நீங்கும் !
தோழமை கொண்டால் செயல்ஓங்கும் !

29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_பாடல்கள்.pdf/31&oldid=1341979" இலிருந்து மீள்விக்கப்பட்டது