பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



2
இதுதான் இதமான சமயம்

இதுவரை வாழ்ந்து கொண்டு வருகிறோம். நிச்சயம், நமக்கு இதில் எவ்வித ஐயமும் இல்லை.

எதிர்க் காற்றில் பட்டம் ஏறி பறப்பது போல, எதிர்நீச்சல் போட்டுக் கொண்டு வாழ்க்கையை சமாளித்துக்கொண்டு வருகிறோம். இதிலும் நமக்கு எந்த வித சந்தேகமும் இல்லை.

காலிலே இடித்துக் கொண்ட பிறகு கீழே கிடக்கும் கல்லைப் பார்க்கிறோம். தலையிலே முட்டிக் கொண்ட பிறகு, மேலே இருக்கும் பொருளைப் பார்க்கிறோம். வலியிருக்கும் வரை அதை சபிக்கிறோம். பிறகு பயணத்தைத் தொடர்கிறோம். வாழ்க்கையில் இதுபோல எத்தனையோ சந்தர்ப்பங்கள், சம்பவங்கள்.