30
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
நல்ல செயலாற்றல் இல்லாதவர்கள் என்பதையும் தெளிவாக்கி விடும்.
ஆகவே, உழைப்பு என்பது மனிதர்க்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்று எண்ணி மகிழ்ந்து, செயல்பட்டு கடுமையாக உழைப்பவர்களே வாழ்க்கையில் வெற்றியை அடைய முடியும்.
‘தைரியமாக உழைப்பவர்கள் தான் வெற்றியை அடைய முடியும்’ என்கிறார் நேரு.
“வேலையைத் தொடங்குவதே சிறந்த வெற்றிதான்.” என்கிறார் இன்னொருவர்.
அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அறிவு கற்பிக்கிறது. அதை முடித்து வெற்றி காண்கிறது உழைப்பு.
இறுதியாக ஒன்று.
ஒரு பணியில் ஈடுபடும் பொழுதுதான் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒவ்வொரு பணிக்கும் உள்ளாற்றல், திறமை தேவைப்படுகிறது. மனித சக்தியும் திறமையும் அதற்காகவே படைக்கப் பட்டிருக்கிறது.
எனவே, மகிழ்ச்சிதரும் என்ற எதிர்பார்ப்புடன் நாம் உழைக்காமல் மகிழ்ச்சி இல்லை. உற்சாகத்துடன் உழைப்போம். அது நம்மை உயர்த்தித்தான் நிற்கும். நாம் உயர வேண்டுமானால், நமக்கு நாம் தான் உதவிக் கொள்ள வேண்டும்.
வேறு வழியேயில்லை!