பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா





6
முடிவு எடுப்பதுதான் முக்கியம்!

ஆரம்பம் என்று ஒன்று இருந்தால், முடிவு என்று ஒன்று இருந்தாக வேண்டும். முடிவு நேர்வதற்கு இடையில் காலதாமதம் நேரலாம். அவ்வளவுதான்.

ஆகவே, முடிவுக்காக நாம் தயாராகிக் கொள்ள வேண்டும். எங்கோ ஓரிடத்தில் ஊற்றாகத் தோன்றுகின்ற ஆறுக்கு முடிவு கடல்தான். இடைக் காலத்தில் ஏற்படுகின்ற உறவு ஆறுகள், கிளைநதிகள் எல்லாம் பயணத்தில் வந்து போகும் அன்றாட நிகழ்ச்சிகள்.