பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமக்கு நாமே உதவி

47


செய்யப் போகும் செயல்முறைகளை ஒரு முறையாவது மனதுக்குள்ளேயே ஒத்திகை பார்ப்பதும், மாற்று முறை ஏதாவது வந்தால் அதையும் மாற்றுத் திட்டமாக வைத்துக் கொள்வதும் தொழிலுக்குரிய சிந்தனைகளாகும்.

தொழிலில் சுறுசுறுப்பாக விளங்குபவன் கஷ்டத்தைக் கூற மாட்டான். கண்ணீர் விட மாட்டான். காரணம் என்ன ஏனென்றால், அவனுக்குத் தான் நேரம் இருக்காதே!

ஏன் என்றால், தொழில் என்பது வாழ்க்கையின் சந்தோஷமாகும். சந்தோஷத்தை விரிவு படுத்திக் கொள்பவன் புத்திசாலி. புத்திசாலிதான் புகழ்பெற முடியும். அதற்கு அடிப்படை நமக்கு நாமே உதவிக் கொள்வது தான்.