நமக்கு நாமே உதவி
37
3. அப்படித் தேர்ந்தெடுப்பதானது ஆற்றலை அளிப்பதுடன், ஆழ்ந்த அறிவினையும் கொடுக்கிறது. இதனால் சாமர்த்தியமாக எந்தப் பணியையும் சாதிக்கின்ற தெளிவும் வலிவும் கிடைத்து விடுகின்றது. அதற்குரிய பரிசாக, பதவி உயர்வோ, பணவரவோ, புகழோ, அதிகார பலமோ எதுவும் கிடைப்பதற்கு ஏதுவாகவும் அமைந்து விடுகிறது.
4. பணியோ வியாபாரமோ எதுவாக இருந்தாலும், அதை பாரமாகக் கருதாமல், கடனே என்று நினைக்காமல், விதியே என்று தொடராமல், செய்யும் பொழுதே சந்தோஷமாகச் செய்யும் சிந்தையை இந்தத் தேர்ந்தெடுக்கும் பணி அளிக்கிறது.
5. செய்யும் தொழிலில் சந்தோஷம் இருப்பதால், இறுதி முடிவும், அதற்குரிய பலனும் சிறப்பாகவே அமைகின்றன. விரைவாகவும் பணி முடிகிறது. அதன் விளைவுகளும் நேர்த்தியாகவே நிறைவுபெற்று வருகின்றன.
எவ்வாறு தேர்ந்தெடுப்பது?
நமக்கென்று ஒரு பணியை அல்லது தொழிலைத் தேர்ந்தெடுப்பது ஏன் என்றால், அது நமக்கு உதவியாக இருக்கும் என்பதால் தான். ‘நமக்கு நாமே உதவி’ என்பதை நம் மனதில் கொண்டு தான் நடந்து கொள்ள வேண்டும்.