பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமக்கு நாமே உதவி

81


நெளிவு, பணம் வந்த பிறகு, பிறரின் செயல் முறைகள் எல்லாம் தலைகீழாய் மாறி விட்டதே!

காரணம் பணம்தான், படிப்பு, பண்பு, பேரறிவு, ஒழுக்கம் இவையெல்லாவற்றையும் மூடி மறைத்து விட்டது பணம். பணம் உள்ளவன் எப்படியிருந்தாலும் போற்றுகிறது. பணத்திற்கு அவ்வளவு சக்தி. பணம் வைத்திருப்பவன், எப்படியிருந்தாலும், அவனைப் பெருமைப் படுத்தி விடுகிறது இந்தச் சமுதாயம். மானம்கெட்ட சமுதாயம்.

இந்தப் பணத்தைப் பற்றி ஏன் இவ்வாறு கொஞ்சம் அழுத்தமாக எழுதுகிறேன் என்றால், இந்தச் சமுதாயம் பணத்தைத் தான் பெருமையாகக் கருதுகிறது. பணம் தான் மக்களிடத்தில் எல்லாவற்றிற்கும் ‘பிளஸ் பாயிண்டாக’ இருக்கிறது.

இந்த சமுதாயத்தில் நாம் கெளரவமாக இருக்க வேண்டும் என்றால், நமக்கு நாமே உதவிக்கொள்ள வேண்டும் என்றால், முதலில் பணம் சம்பாதிப்பதை முதற்படியாகக் கொள்ள வேண்டும்.

படிப்பு, அறிவு, ஞானம், கடின உழைப்பு, உயர்ந்த பண்பாடு இவையெல்லாம் ஓர் உடல் போன்றது அந்த உடல் எழுந்து நடமாட உயிர் வேண்டுமல்லவா? அந்த உயிர் தான் நாம் பெருமையாகப் பேசிக் கொண்டு வருகிற பணம்.

நாம் பணம் சம்பாதிப்பதைத் தான் இலட்சியமாகக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நமது பேச்சம், பண்பும், உண்மையும், உயர்ந்த லட்சிய வாழ்வும் மக்களிடையே எடுபடும். பிரபலமாகும்.