பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


அடுத்தவர்களிடம் பிரியத்தையும் மரியாதையும் பெற்றுத் தருகிறது.

நமது முயற்சியைப் பற்றிக் கேவலமாகப் பேசுபவர்களும், நமது வெற்றியைப் பற்றி வன்மையாக விமர்சிப்பவர்களும், நமது தோல்வியைக் கண்டு விலா எலும்புகள் ஒடிய சிரிப்பவர்களும் தான் நம்மைச் சுற்றி இருக்கின்றார்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

அப்படிப்பட்டவர்களிடமும் நாம் அன்பாகத் தான் பேச வேண்டும். அன்பாகவே நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் விரும்பாவிட்டாலும், நாம் அன்புடன் பழகிடவே முயல வேண்டும்.

ஏனெனில், பேசுகிற சொல்லும், வீசுகிற கல்லும் மீண்டும் தொடங்கிய இடத்திற்கு வந்து சேராது. பேசிய சொல் பேசியது தான். வீசிய கல்வீசியதுதான்.

வாழ்வில் முன்னேற விரும்புபவர்கள், நாவை மிக எச்சரிக்கையுடன் பயன்படுத்தவேண்டும் சொல் மட்டுமே முதலில் ஒருவரை வசீகரிக்கிறது. அல்லது விரோதியாக்குகிறது.

முன்னேற விரும்புகிறவர்களுக்கு பல நல்ல நண்பர்கள் கூட இல்லாமல் இருந்துவிடலாம். ஆனால் எதிரி என்று யாரும் இருக்கக்கூடாது.

ஏனெனில், நமது முன்னேற்றத்தின் வேகத்தை எங்கிருந்தோ ஓர் எதிரியால் மிக எளிதாகத் தடுத்து விட முடியும். வீணானத் தடைகளை நாமே ஏன் விளைவித்துக் கொள்ள வேண்டும்?