பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுள் கைவிட மாட்டார்

65


தங்கை இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்ட பிறகு, ஒரு இட்லிக்குள்ளே வைரக்கற்களைப் பதித்து வைக்க ஆரம்பித்தார்.

அவரது அன்பு மகனும் அப்பா தயாரிக்கும் அற்புதமான இட்லியையும், ஆசையோடு பார்த்துக் கொண்டேயிருந்தான்.

இரண்டு இட்லிக்குள்ளே எல்லா வைரக்கற்களும் சங்கமமாயின. அவைகளின் மேலே மிளகாய் பொடி, எண்ணெய், சட்டினி வகையறாக்களை இட்டு, அவற்றின் மேலே மேலும் பல சாதாரண இட்லிகளை மேலோட்டமாக வைத்து, ஒரு அருமையான பொட்டலமாகக் கட்டினார். அதற்குப் பிறகுதான் அற்புதசாமியின் நெஞ்சின் பாரம், கொஞ்சம் குறையத் தொடங்கியது.

எந்தப் பயலாலும் இதைக் கண்டுபிடிக்கவே முடியாது? என்று மனதுக்குள்ளே சவாலும் விட்டார்.

தங்கையிடம் வைரக் கற்களைப் பற்றி கூறினால், எங்கே தனக்கும் பங்கு வேண்டுமென்று கேட்டுவிடுவாளோ என்ற பயத்தினாலே, தங்கையிடம் பேச்சையும் சிக்கனமாகவே பேசி வைத்தார்.