பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுள் கைவிட மாட்டார்

89


‘பரவாயில்லை நடேசன்’ நடந்தது நடந்ததாக இருக்கட்டும். கவலைப்படாமல் இருங்கள். உடல் நலமானதும் வீட்டுக்கு வாருங்கள். உங்களைக் காப்பாற்றும் எல்லா பொறுப்பும் என்னைச் சார்ந்தது’ என்று ஆறுதல் கூறினார்.

‘ஆமாம் நடேசன்! நீங்கள் வைத்திருந்த வைரக்கற்கள் எங்கே? இப்பொழுது கொடுத்துவிடுங்கள். அது மிகவும் புனிதமான கற்கள் ஆயிற்றே என்று கேட்டார்.

அந்த வைரக்கற்கள் எங்கே போயிற்று என்று எனக்குத் தெரியவில்லையே என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார் நடேசன்.

‘நீங்கள் அழவேண்டாம்! நிதானமாகக் கூறுங்கள். அதுவரை காத்திருக்கிறேன்’ என்று தருமலிங்கம் கூறினார்.

நான் கரும்புக் காட்டிற்குள் அடிபட்டுக் கிடந்தேங்க! இராத்திரி முழுதும் அப்படியே மயக்கமாகவே கிடந்தேங்க காலையில் வேலைக்கு வந்த ஆளுங்க என்னைப் பார்த்ததும், அப்படியே தூக்கிட்டு வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்துட்டுப் போனாங்க.