பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


விடாமல், பல தெய்வங்களை வேண்டிச் கொண்டார்.

ஆயிரக் கணக்கான ரூபாய்களுக்கு சொந்தக்காரராக இருக்கும் அற்புதசாமி, இன்னும் இரண்டே நாளில் இலட்சக்கணக்கான ரூபாய்களுக்கு அதிபதி என்று எண்ணியதும், லட்சாதிபதி தோரணையில் ஜம்மென்று உட்கர்ந்து கொண்டார்.

இன்னும் அரைமணி நேரந்தான் இருக்கிறது. வாழ வந்தபுரம் தருமலிங்கத்தின் முன்னோர்கள், தங்கள் பரம்பரைச் சொத்தாக மிகவும் பாதுகாப்புடன் பத்திரப்படுத்திக் கண்ணேபோல் காத்திருந்த வைரங்கள், இலங்கைக்குப் போய்விடும்!

அப்புறம் யார் கையில் இருக்குமோ! யார் பெட்டியில் உறங்குமோ? என்ன ஆகுமோ யார் கண்டார்? அந்த அம்பிகைக்கே வெளிச்சம்! மகன் இட்டிலி வாசனையிலும் அப்பாவோ வைரயோசனையிலும் மூழ்கிக் கிடந்தனர். அவர்களை விட்டுவிட்டு இந்த அரைமணி நேரத்திற்குள் நாம் வாழவந்தபுரம் போய், தருமலிங்கம் எப்படி இருக்கிறார் என்று பார்த்து வருவோமா!