பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுள் கைவிட மாட்டார்

59


தேவையான துணிமணிகளை மற்றும் வீட்டிற்கு வேண்டிய சாமான்களை வாங்கி வர வந்தார்.

அவ்வாறு வந்த பொழுத தான், பொட்டலம் வந்துதானாக அவர் பையிலே விழுந்தது.

பிச்சைக்காரி பாத்திரத்தில் இருந்து விழுந்த பொட்டலம், நிச்சயமாக காசு மடித்திருக்கும் பொட்டலமாகத்தான் இருக்கும் என்று நினைத்து, வீட்டிற்குள் போனதும் கதவை சார்த்திக்கொண்டு, பொட்டலத்தை அவிழ்த்தார் அற்புதசாமி.

குப்பையிலேதான் குண்டுமணி கிடைக்கும் என்று அவர் அடிக்கடி அனைவரிடமும் சொல்வதுண்டு.

பொட்டலத்தை ஏளனமாகவும், அதே சமயத்தில் பயபக்தியுடனும் அவிழ்த்தார்! என்ன ஆச்சரியம்! அவரது வாய் “ஆ வெனப் பிளந்து, அதிக நேரம் அப்படியே திறந்தே கிடந்தது.”

அப்பா அப்பா! என்று அவருடைய மகன், பத்து முறைக் கத்தி அழைத்துக்கொண்டே வந்து, உடலை ஆட்டி அசைத்த பொழுதுதான், அவருக்கு இந்த உலகத்தைப் பற்றிய நினைவு வந்தது. திறந்தவாயும் மூடியது.