பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்ததால், இருவரையும் ஆற்று வெள்ளம் வேகமாக அடித்துக் கொண்டு சென்றது.

கரை மேல் அவிழ்ந்த நிலையில் பொட்டலம் கிடந்தது. லட்சக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள வைரக்கற்கள், ஒரு கசங்கிய காகிதத்தில் குப்பைக் கூளம்போல கவனிப்பாரற்றுக் கிடந்தது.

இந்த வைரக் கற்களுக்கு ஆசைப்பட்ட ஒருவர், புலியால் அறையப்பட்டு அநாதையாக கரும்புக் காட்டிலே கிடக்கிறார். அவரை உதாசீனம் செய்து வந்த துரைசாமியோ, கையும் காலும் கட்டப்பட்டு உதைவாங்கிக் களைத்து போய்கிடக்கிறார். அவரை அடித்துத் துன்புறுத்திய இருவரும், இப்பொழுது ஆற்றோடு போய்க் கொண்டிருக்கிறார்கள்.

யார் பிழைப்பார் யார் இறப்பார் என்று யாருக்குத் தெரியும்? தேள் கொட்டிய திருடன் போல, இருவரும் மரணப் போராட்டத்தை மெளனமாக அல்லவா நடத்திக்கொண்டு ஆற்றோடு போகின்றார்கள்!