பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுள் கைவிட மாட்டார்

79


அற்புதசாமி, அடுத்திருக்கும் இட்லியை எடுத்துக் கொடுத்தார்.

‘அந்த இட்லி எனக்கு வேண்டாம் வேற இட்லிதான் வேண்டும்’ என்றான் அற்புதசாமியின் அருமைக் குமாரன் முருகன். முருகன் திருவிளையாடல் ஆரம்பமாயிற்று.

வேற இட்லியா! அது வேண்டாம்! இதையே சாப்பிடுபோதும் என்று அதட்டினார் அற்புதசாமி!

எனக்கு அந்த இட்லிதான் வேண்டும் என்று அடியில் வைத்திருக்கும் மிளகாய் பொடியுள்ள இட்லியை சுட்டிக் காட்டிக் கேட்டான்.

அற்புதசாமி அவனை அடிப்பதற்காக் கையை ஓங்கியபடி, ‘அறிவு கெட்டவனே! அந்த இட்லி ரொம்ப உரைக்கும்! வயிற்றை வலிக்கும்! பேசாம நான் கொடுப்பதை சாப்பிடு’ என்று அளவுக்கு மீறி, கொஞ்சம் கோபமாகவே கத்தி விட்டார்.

பையன் பிடிவாத குணம் உள்ளவன், அந்த இட்லிதான் தனக்கு வேண்டும் என்று கேட்டபடியே சத்தம் போட்டு அழ ஆரம்பித்தான்.

அப்பா மகன் பிடிவாதத்தையும், எதிர்வாதத்தையும் பொழுது போகாத மற்ற பயணிகள், மிகவும் ஆர்வத்துடன் வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினார்கள்.