பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

டாக்டர். எஸ் நவராஜ் செல்லையா


விளைகின்ற நோய்கள் உறுப்புகளின் வீரியத்தை ஒழிக்கவே முயல்கின்றன. ஆகவே, உடலுறுப்புகளை ஒழுங்காகப் பாதுகாக்காதவர்கள்தான் முதலில் பாதிக்கப்படுகின்றனர். படுவேதனைகளுக்கும் ஆளாகின்றனர்.

ஆனால், புத்திசாலித்தனம் நிறைந்த முதியவர்கள் பலர், தங்கள் சூழ்நிலையின் சூட்சமத்தை உணர்ந்து, சுகமாக அதனைப் புரிந்து கொண்டு நடந்து கொள்வதால், தவறி வீழ்ந்து விடாமல் தப்பித்துக் கொள்கின்றனர்.

நோய்கள் வரவே கூடாது என்பது நமது வாதமல்ல. வருகின்ற நோய்களைத் தவிர்ப்பது எப்படி? பிறகு தேறிக் கொள்வது எப்படி? என்பதைத் தெரிந்து கொண்டவர்களே முதுமையின் கொடுமையிலிருந்து தப்பலாம்.

மேலும், இளமையை வளர்த்துக் கொண்டு மகிழலாம். முதுமையில் இளமையைக் காண்பது என்பது முடியாத ஒன்றல்ல முயன்றால் எல்லாமே முடியும்... படியும்.

அறிவுக்கும் அனுபவத்திற்கும் அகப்படாத சுக விளைவுகள் இல்லையென்றே சொல்லலாம். அந்த விளைச்சலில் முதுமையைப் போக்கலாம். இளமையைச் சேர்க்கலாம்.

நமது இலட்சியமும் இதுதானே!