76
டாக்டர். எஸ் நவராஜ் செல்லையா
அதனால் தான் ‘வயதானாலும் புத்தி கொஞ்சம் கூடக் கிடையாது’ என்ற வசை மொழிக்கு சிலர் ஆளாகின்றார்கள்.
தங்களது முதுமையை அவர்கள் மற்றவர்களுக்கு முன்நிறுத்திக்காட்டி, பரிதாபம் திரட்டி பாசம் பெற முயற்சிக்கின்றார்கள். அதனால் அவர்கள் எந்தக் காரியத்திலும் துன்பம் நிறைய வந்து விடும் என்று பயப்படுகின்றார்கள்.
எதுவுமே காரணமில்லாமல் கவலைப்படுகின்றார்கள். அவர்கள் வேண்டாத கற்பனைகளால் வதைப்படுகின்றார்கள்.
மனிதத்தனம்
நீண்ட காலம் வாழ்ந்த இவர்கள், தங்களுக்கு எது வேண்டும். என்னென்ன தேவை என்பதை நன்றாக அறிந்திருக்க வேண்டும். தங்களுக்குரிய நிலைமை பற்றியாவது தெரிந்திருக்க வேண்டும். இதுதான் ஒரு மனிதருக்குள்ள மனிதத்தனம்.
இந்த மனிதத்தனம், மனிதக் குணம் இளைஞர்களுக்கு இல்லாமல் இருக்கலாம். ஏனென்றால் அவர்களுக்கு அனுபவம் போதாது. இத்தனை காலம் வாழ்ந்து, தங்களையே அறிந்து கொள்ளாத முதியவர்களை, முட்டாள் கிழங்கள் என்று மற்றவர்கள் திட்டுவது நியாயமாகத்தானே படுகிறது!
முதுமையிலும் மூளை வளர்வதற்கு வைட்டமின்கள் உதவுகின்றன என்று பேராசிரியர் வாலகர் பியூடல் என்பவர் கண்டு பிடித்திருக்கின்றார்.
317 பேர்களை ஆராய்ச்சியில் ஈடுபடுத்திக் கண்டுபிடித்த இந்த கருத்தை மற்றவர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள்.
வைட்டமின் மட்டுமே முதியவர்களை அறிவாளியாக்கி வழி நடத்தி விடுமா? பழக்கம் மாறாதல்லவா?