பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Џлъ---- - * -سے நம்பிக்கையுடன் மேற்கொள்கிற, மாறாத முனைப்போடு, ஆறாத னைப்போடு,செய்கிறபோது, அை ழ்ந்த சுவாசம் என்பார்கள். 助 றபோது, அதை ஆழ கொஞ்சம் கம்பீரமாக வெளிப்படுத்தி விட்டால், அதை யோகியர் சுவாசம் என்பார்கள். யோகியர் என்றால் சம்சாரபந்தத்தை சாய்த்து விட்டுப் போன சாமியார்கள் அல்லர். தேகத்தை திறம் வாய்ந்ததாக மாற்றி, அளவற்ற ஆத்ம சுகம் காணுகிற அறிவாளிகள் என்று அர்த்தம். உடலையும் * மனதையும் கட்டுப்படுத்தி கெளரவமாக வாழ உதவுகிற யோகத்தைச் செய்பவர் என்று அர்த்தம். இப்படிப்பட்ட சுவாசத்தால் என்ன பயன் என்பதை இனி விளக்கமாகக் காண்போம். புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால் கள்ளுண்ண வேண்டாம். தானே களிதரும் துள்ளி நடப்பிக்கும் சோம்பி தவிர்ப்பிக்கும் உள்ளது சொன்னோம் உணர்வுடை யோருக்கே தமிழ்ச்சித்தர் திருமூலர் பாடியிருக்கும் பாடல் இது. திருமந்திரம் 548 வது பாடல் பறவையினும் வேகம் மிகுந்த குதிரைபோன்ற உயிர்காற்றினை மேற்கொண்டால் கள் குடிக்க வேண்டாம். அதுவே ஆனந்தத்தை அளிக்கும். சுகம் நிறைத்து சுறுசுறுப்பாக்கும். சோம்பலைப்போக்கும். இக்கருத்தை மேலோட்டமாகப் பார்த்தால், மிகவும் சாதாரணமாகத்தான் தோன்றும். சற்று ஆழமாக எண்ணிப்பார்த்தால் அதன் அற்புதத் தன்மையும் அபூர்வத் தன்மையும் சிறப்பாகவே 'லப்படும். புள்ளினம் மிக்க என்றதற்கு ஒரு அற்புதக்குறிப்பு உண்டு. 'ள் என்பது பறவைகளில் ஒரு வகை, இந்த வகைப் புள்ளுக்கு