பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



குத்தலாம், முடிந்தால் கடிக்கலாம், விழுந்து அமுக்கலாம், முறுக்கலாம், எலும்பை முறிக்கலாம். விதிகள் குறுக்கே வராது.

இந்தப் பயங்கரப் போட்டியில்தான் இப்படி ஒரு சுவையான சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்திற்குக் காரணமாக அமைந்த அந்த வீரனின் பெயர் அரேசியன் (Arrachian) ஆகும்.

ஏற்கனவே நடந்திருந்த ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி வீரனாகத் திகழ்ந்திருந்த அரேசியன், இந்த ஒலிம்பிக் போட்டியிலும் வெற்றிபெற வேண்டும் என்ற உறுதியுடன் வந்திருந்தான். வெற்றி பெறாமல் செல்வதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டும் இருந்தான்.

விளையாட்டரங்கத்திலே, நடுவர்கள் முன்னிலையில் இந்தப் பயங்கரப் போட்டியான பங்ராசியம் நடக்கத் தொடங்கியது. புகழைப் பெறும் ஆவலில், வெற்றிக்காண, வீரர்கள் இருவரும் சண்டைபோடத் தொடங்கினார்கள்.

சண்டையின் உச்சக்கட்டம். அரேசியனை எதிர்த்த வீரன், அரேசியன் குரல்வளையை தனது கைகளால் அழுத்தி நெறித்துக் கொண்டிருந்தான். விடுபடமுடியாத பிடியின் இறுக்கத்தால் மயக்கம் அடைந்த அரேசியன், தனது கைகளால் எதிரியின் வலதுகாலைப்பிடித்து முறுக்கிக் கொண்டிருந்தான்.

மூச்சுத்திணறி, மரண அவஸ்தையின் வெறியில் அரேசியன் கைகள் எதிரியின் கணுக்கால் மூட்டினை நழுவச் செய்துவிடவே, எதிரி வேதனை தாங்க முடியாமல், தனது இருகைகளையும் தலைக்கு மேலே உயர்த்தி விட்டான்.

போரிடும் ஒருவன் தன் இருகைகளையும் உயர்த்தி விட்டால் அவன் தன் தோல்வியை ஒத்துக்கொண்டதாக அர்த்தம். அப்படித்தான் விதி அமைந்திருந்தது. எதிரி தன்