பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

 கூட இருக்கும். ஏன் ஆளை அடித்துக் கொல்லவேண்டும் என்றால், பந்தை ஆடக்கூடிய ஆட்டத்தினரைக் குறைக்கத் நான் என்பதுவே காரணம் அவர்கள் ஆட்டம் ஆடி முடிக்கின்ற லட்சணம், ஆடிய வழியெல்லாம் பிணக்கோலந்தான். மாலைக் காலம் வரும்வரைதான் ஆட்டத்தின் நேரம், அதற்குள் எவ்வளவோ பிணங்கள் மலையாகக் குவியும்.

ஆதிகால செவ்விந்தியர்கள்தான் இப்படி வெறியுடன் விளையாடியிருக்கின்றனரா என்றால், கீர்த்தி மிக்க கிரேக்கத்தில் நடந்த ஒலிம்பிக் பந்தயங்கள் எவ்வாறு நடந்தன? அதில் ஒரு விளையாட்டுப் போட்டி. ‘பங்கராசியம்’ என்பது அந்தப் போட்டிக்குப் பெயர். பங்கு பெறும் இருவர் குத்துச் சண்டை போடலாம். கடிக்கலாம். குத்தலாம், மிதிக்கலாம், கிள்ளலாம். கொல்லலாம். அதாவது இருவரில் ஒருவர் இறக்கும் வரை அந்தப் போட்டி தொடரும். இத்தனை நிகழ்ச்சியையும் ஆறறிவு படைத்த மக்கள் சுற்றிச் சூழ இருந்து, கைதட்டி மகிழ்ந்து கண்டு ரசித்திருக்கின்றார்கள். அவர்களுக்கிருந்த அந்த வெறிதான் எப்படிப்பட்டது?

அவர்களுக்குப் பின்னே, விளையாட்டுக்களில் அதிக ஆர்வம் காட்டியவர்கள் ரோமானியர்கள். சர்க்கஸ் கூடாரம் போன்ற அமைப்புள்ளதாக, பரந்த மைதானத்தை அமைத்து, அதைச் சுற்றிலும் பார்வையாளர்கள் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் விதத்தில் இருக்கைகளை அமைத்தனர் காட்டில் திரியும் கொடிய மிருகங்களக் கொண்டு வந்து அவைகளே பல நாள் பட்டினி போட்டு, ஒன்றை ஒன்று கொன்று தின்னச் செய்து கண்டு களித்தனர்.

சிங்கத்திற்கிடையே யானையையும் மற்ற மிருகங்களையும் விட்டு விளையாட்டைப் பார்த்த மக்களுக்கு அதில் வெறுப்பு ஏற்படவே, பட்டினி கிடக்கும் சிங்கங்களை பரந்த மைதானத்திலே விட்டு, பகை நாட்டில் சிறை பிடித்த வீரர்களை அதிலே தூக்கியெறிந்து மோதச் செய்து, வேதனைக்

வி.வி.-8