பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



97

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



மறுநாள் காலையில் கிரிக்கெட் ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபொழுது, 'நானும் ஆடுவேன்' என்று மைதானத்திற்கு வந்து விட்டார் சம்மர்ஸ். தலைக்காயத்தை மறந்தார். சுட்டெரிக்கும் வெயிலில் நின்று கொண்டு, நாள் முழுதும் பந்தைத் தடுத்தாடும் பணியில் (Fielding) இருந்துவிளையாடினார்.

அதற்கு மேலும் அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருக் கலாம். அதுதான் இல்லை, லார்டு மைதானத்திலிருந்து தனது இடமான நாட்டிங்காம்ஷயருக்கு பிரயாணம் செய்தார்.

எல்லா அதிர்வுகளும் இணைந்து கொண்டன. காயத்தின் வேகத்தை அதிகப்படுத்தி விட்டன. முடிவு, அந்த விபத்து அவரை கொள்ளை கொண்டு போய்விட்டது. முதல்தர ஆட்டக்காரர், எல்லா வாழ்க்கை நலன்களையும் அனுபவிக்க இருந்த இளைஞர். அகால மரணத்திற்கு ஆளானார். . காயம் ஆறும்வரை அவர் காத்திருந்தால், இது போன்ற எத்தனையோ கிரிக்கெட் போட்டிகளில் அவர் கலந்து கொண்டிருக்கலாம். டெஸ்ட் போட்டியில் கூட இடம் பெற்றிருக்கலாம். ஆனால், விளையாட்டை மிகவும் சீரியசாக நினைத்துக் கொண்டார். ஆர்வத்தை அடக்கியாளாமல் விட்டுவிட்டார். அறிவுக்கு மதிப்புதராது, உணர்ச்சிக்கு இடம் கொடுத்தார். அதற்கு ஒரு பெரிய தண்டனையே அவருக்கு கிடைத்து விட்டது.

விபத்து நிகழாமல் விளையாட வேண்டும் என்பதைத்தான் எல்லோருமே எதிர்பார்க்கிறோம். மீறி விபத்து வந்துவிட்டால், அதை சுகப்படுத்தும்வரை, உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும். அதுதான் உண்மையான விளையாட்டு வீரர்களுக்கு அழகாகும். மீறி நடப்பவர்க்கு சம்மர்ஸ்தான் வந்து புத்திகூற வேண்டும்!