பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



34

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


ஒரு முறை இதயம் சுருங்கி விரிகிறபோது, இதயத்திலிருந்து இரத்தம் உடம்பு முழுவதும் ஓடிப் போய் சேர வேண்டும். அப்படி ஒரு முறை சுருங்குகிறபோது, 2 பவுண்டு எடையை ஒரு அடி உயரம் தூக்க எவ்வளவு சக்தி வேண்டுமோ, அவ்வளவு சக்தி இதயத்திற்குத் தேவைப்படுகிறது.

நெல்லுக்குப் பாய வேண்டிய தண்ணீர், புல்லுக்குப் பாய்வதையே வீண் என்கிறபோது, தேவையான செல்களுக்குச் சேரவேண்டிய இரத்தம், தேவையில்லாத இடங்களுக்கும் போகிறபோது, இதயத்தின் வேலைப் பளு அதிகமாகிறது அல்லவா!

அதனால், இதயவலி ஏற்படுகிறது. இரத்தக் குழாய்களில் இரத்தக்கட்டு (Thrombosis) ஏற்படுகிறது. அதனால் இதயத்திற்கு அதிர்ச்சி (Stroke) ஏற்படுகிறது. இரத்தச் சிறு குழாய்களில் இறுக்கம் ஏற்பட்டு, இரத்த ஓட்டம் தடைபட நேரிடுகிறது.

சிலருக்கு நீரிழிவு நோய் உண்டாகிவிடுகிறது. சாப்பிட்ட சோறு ஜீரணமாகமல் போவதும்; ஜீரணிக்க உதவும் இன்சுலின் என்ற சுரப்பி பாதிக்கப்படுவதுமே நீரழிவுக்கு முக்கிய காரணமாகும்.

சாப்பாடு, சாப்பாடு என்று மக்கள் அலைகின்றர்களே சாப்பாடு என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?

சப்பாடு என்றால் மரண அடி என்று அர்த்தம். உடலுக்கு நல்லது, மனதுக்கு திருப்தி தருவது சாப்பாடு என்பது எப்போது தெரியுமா? அளவுடன் இருக்கும் போதுதான், அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சல்லவா?