பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்

70


28. செத்தும் ஜெயித்த சீமான்!

ஜெயித்தவன் சாகலாம். அது இயற்கைதான். ஆனால், செத்தவன் ஜெயித்தான் என்றால் அது எப்படி? இயற்கைக்கு மாறாக அல்லவா இது இருக்கிறது! உண்மைக்குப் புறம்பாக அல்லவா நமக்குத் தெரிகிறது!

ஜெயிப்பதற்காகத்தான் போராட்டம் நடக்கிறது. செத்துவிட்டால் எப்படி போராட முடியும்? செத்துக் கொண்டே ஜெயித்தானா? இல்லையென்றால் போனால் போகிறது பாவம் என்று எதிரி தன் தோல்வியை தானாக முன்வந்து ஒத்துக்கொண்டானா!

கேள்விகள் பல கிளைவிட்டுக் கிளம்புவது புரிகிறது. அப்படி நமக்கு ஆர்வம் ஊட்டும் அத்தகைய அதிசயமான சம்பவத்தை என்னவென்று இனி பார்ப்போம். பிறகாவது மனதில் அமைதி காணலாம் அல்லவா!

கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே, கீர்த்திமிக்க கிரேக்கர்கள், ஒலிம்பிக் பந்தயங்கள் நடத்தி, தங்களின் ஒப்பற்ற ஆற்றலையும் அறிவாண்மையையும் உலகுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருந்த காலத்தில்தான், இந்த விநோத நிகழ்ச்சி நடைபெற்றது.

ஓடுவது, தாண்டுவது, வேல் எறிவது, தட்டெறிவது போன்ற நிகழ்ச்சிகளைப் போல, குத்துச்சண்டை மல்யுத்தப் போட்டிகளும் அங்கே நடைபெற்றன. அது மட்டுமன்றி, பயங்கரப் போட்டி ஒன்றையும் நடத்தினார்கள். பங்ராஷியம் என்பது அதன் பெயர்.

இந்தப்போட்டியானது, மல்யுத்தமும் குத்துச்சண்டையும் கலந்து உருவாக்கிய ஒரு கொடுமையான போட்டியாகும். இதற்கென்று வரைமுறையான விதிகள் எதுவும் இல்லை எப்படி வேண்டுமானாலும் பிடிபோடலாம். எதிரியைக்