பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அவர்கள் தமிழ் இலக்கியத்தில் விளையாட்டுத்துறை நூல்கள் அதிகமாக வெளிவர வேண்டும் என்ற முயற்சியில், இதுவரை 80க்கும் மேற்பட்ட நூல்களையும், 20க்கும் மேற்பட்ட கதை கவிதை நாடக நூல்களையும் எழுதி வெளியிட்டிருக்கிறார் இவர் எழுதிய ‘ஒலிம்பிக் பந்தயத்தின் கதை’ எனும் நூல் 1977ம் ஆண்டும், விளையாட்டுக்களின் கதைகள். எனும் நூல் 1981ம் ஆண்டும் “விளையாட்டுக்களின் வழி முறைகளும் வரலாறும்” எனும் நூல் 1984ம் ஆண்டும் தேசிய விருதினைப் பெற்று இருக்கின்றன.

தமிழிலும், உடற்கல்வித் துறையிலும், முதுகலைப் பட்டமும், டாக்டர் பட்டமும் (M.A.M.P.Ed.Ph.D.) பெற்றுள்ள ஆசிரியர் வானொலி, டெலிவிஷன், வாரப் பத்திரிகைகளில் தொடர்ந்து விளையாட்டுத்துறை பற்றி பேசியும் எழுதியும் வருகிருர்.

தமிழில் முதன்முறையாக “விளையாட்டுக்களஞ்சியம்” எனும் விளையாட்டுத் துறை மாத இதழை 1977 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடத்தி பணியாற்றி வருகிறார்.


Printed at :Grace Printers, Madras-33