பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

45


புதிய தம்பதிகளுக்கு உங்களது யோசனை என்ன என்று கூறுங்களேன்!

முதலிரவு என்றதும், உடலுறவுக்காக அது என்று எல்லோருமே உறுதி செய்து கொள்கின்றனர். இத்தனை ஆண்டுகளாக எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருந்ததையெல்லாம், அந்த ஓர் இரவுக்குள்ளேயே தெரிந்துகொண்டு விடவேண்டும், அனுபவித்து விடவேண்டும் என்று துடித்துப் போய் விடுகின்றனர். அதற்கான எல்லா முயற்சிகளையும் தீவிரமாக்கிக் கொள்கின்றனர்.

பெண்ணுக்கோ இந்த முதலிரவு ஒரு திரிசங்கு சொர்க்கம். பிறர்சொல்லக் கேட்ட கதைகள்; என்ன நடக்கப் போகிறதோ? எப்படியெல்லாம் தனனை அலைக் கழிக்கப் போகிறாறோ? எதிர்பார்க்காதது எதுவும் நடந்து விடுமோ என்றெல்லாம் பெண்ணானவள் ஓர் இனம் புரியாத ஒருவித பெருமூச்சுடன் அந்த நேரத்தில் இருப்பதும் உண்டு. பயந்துகொண்டு துடிப்பது உண்டு.

இப்படி முன்பின் பழக்கமில்லாத, அறிமுகமில்லாத புதியவர்கள் இருவர். ஒரு தனிப்பட்ட சூழ்நிலையில் தனித்திருக்க விடப்படுகிற பொழுது, ஒருசில இனிய முறைகளை இருவரும் ஒத்துப்போய் கையாண்டால்தான், இருவருக்குமே நல்லது போகப் போக அது சுகபோகமாகவும் இருக்கும். சுகலோகமாகவும் இருக்கும்.

கிணற்று நீரை வெள்ளமா கொண்டு போய்விடும்?இந்த மனப்பாங்கு அந்தநேரத்தில் ஆணுக்கு வந்தால் அது மிகமிக நல்லது. ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்?.............