பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 யார் பந்தை அடிச்சுக்கிட்டே போய் அடுத்தவங்க எல்லைக்கு அப்புறம் தள்ளுருங்களோ, அவங்கதான் வெற்றி பெற்றவங்க. - சாந்தி : எவ்வளவு நேரத்துக்கு ஆடனும் ? அப்பா : நேரமோ கணக்கில்ல, சூரியன் உதிக்கறப்போ ஆரம்பிக்கற ஆட்டம், மாலையில சூரியன் மரையிற வரைக்கும் ஆட னும். ராஜா : அடேயப்பா அவ்வளவுநேரமா ? அவங்களுக்கு அசதியாயிருக்காதாப்ப ? அப்பா விளையாட்டுன்னு அசதி இருக்கும். வெறி வந்துட்ட துன்கு அசதியாவது வசதியாவது. சாந்தி : எப்படி வி லயாடினங்க ? அப்பா : கட்டையில செய்த ஒரு மரப்பந்தானது ரெண்டு கூட்டத்துக்கும் மத்தியில கிடக்கும். பந்தை அடிக்கலாம்னு சொன்ன உடனேயே எல்லோரும் பந்தை அடிக்க ஆரம்புச்சுடுவாங்க எதிரில் பந்து கிடந்தா பந்தை அடிப்பாங்க. தடுக்க வந்துட்டா-ஆள் கிடைச்சா ஆளு! கால் கிடைச்ச காலு, தலே கிடைச்சா தலே இப்படி கண்ணுமண்ணு தெரியாம அடிப்பாங்க. ராஜா : (திடுக்கிட்டு) ஆள் மேல் பட்டா அப்பா : அதே கதி தான். மண்டை உடையும். கால் கை ஒடியும். ரத்தம் கொட்டும். ஆளே குளோஸ்தான். அவங்க நோக்கமே அதுதானே. சாந்தி : எதுப்பா ஆ’ள சாகடி க்கறதா! ■ அப்பா , ம் ஹல்ம் : எதிரில் வந்து இடைஞ்சல் பண்ணினு m எரிச்சல் வராதா ? கூட்ட த்தை குறைச்சு பந்தை கொண்டு போக வேண்டாமா ? ஆட்டம் முடிஞ்ச பிறகு பார்த்தா அங்கங்கே இறந்தவங்களோட பிணந்தான்