பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


ஒருவாறு சமாதானம் செய்து, இருவரையும் சண்டை போடாமல் விலக்கி விட்டார்கள்.

இந்த சண்டை நிகழ்ச்சிக்குப் பிறகு, டியோக்சிபஸ் முன்போல தனது மன்னனின் அன்புக்குரியவனாக இல்லாமல், சற்று ஒதுங்கியே இருந்து வந்தான். அலெக்சாந்தர் மன்னன் இவன் மேல் கோபமாக இருக்கிறான், முன்போல அன்பாக இல்லை என்பதை புரிந்து கொண்டு அதனை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் இவன் எதிரிகள்.

எதிரிகள் கூடி, ஒரு பயங்கரமான திட்டத்தைத் தீட்டினார்கள், அதன்படி, ஒரு தங்கக் கோப்பையைக் கொண்டு போய், அவன் இருந்த அறையில் ஒளித்து வைத்து விட்டு, டியோக்சிபஸ்ஸைத் திருடன் என்று குற்றம் சாட்டத் தொடங்கினார்கள். தான் திருடவில்லை என்று எவ்வளவோ மறுத்துப் பார்த்தும், யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவனது அறையை சோதனையிட வேண்டும் என்று எதிரிகள் வற்புறுத்தினர்.

தங்கக் கோப்பையைத் தன் அறையில் கண்டதும், வீரனுக்கு அவமானம் தாங்க முடியவில்லை. இனிமேல் வாழ்வது மரியாதை அல்ல என்று மனம் நொந்து, டியோக்சிபஸ் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனான். வஞ்சகத்தால் தீர்த்துக் கட்டினோம் என்று எதிரிகள் கைகொட்டி நகைத்து மகிழ்ந்தனர்.

வாழ்க்கையில் புகழ் அதிகமாக வரவர, புகழுக்குரியவன் பத்திரமாக இருக்க வேண்டும்; புத்திசாலித்தனமாகப் பேச வேண்டும் சாதகம் தேடி சதி செய்திடக் காத்திருக்கின்ற

எதிரிகளின் தந்திரத்துக்கு ஆளாகாமல், மிகவும் எச்சரிக்கையாகவும் வாழ வேண்டும் என்ற நீதியை உலகுக்கு உணர்த்துகின்ற வாழ்க்கையைத்தான் வாழ்ந்து காட்டியிருக்கிறான் டியோக்சிபஸ்.