111
தான் அந்த சமூகப்பிரிவுகளின் பிரதிபலிப்பாக சீட்டாட்டம் பிரித்துக் காட்டப்பட்டிருக்கிறது என்றும் விளக்கம் கூறுவர்.
ஐரோப்பிய நாட்டின் சமூகப் பிரிவும் நமது நாட்டினைப் போலவே நான்கு வகைப் பிரிவுகள் உடையதாகவே இருந்திருக்கின்றன. நம் நாட்டில் அரசர், அந்தணர், வைசியர், சூத்திரர் என்று இருந்ததாகக் கூறுவர். அதுபோலவே, ஐரோப்பிய நாட்டு சமூகப் பிரிவும் பிரபுக்கள், குருமார்கள், வியாபாரிகள், உழவர்கள் என்று அமைந்திருந்தன,
ஒவ்வொரு சீட்டுப் பிரிவும் ஒவ்வொரு சமூகப் பிரிவை சுட்டிக்காட்டி, அன்றாட வாழ்க்கை முறையை சித்தரித்துக் காட்டியிருக்கிறது.
சமூகப் பிரிவு | சீட்டு பிரிவு |
---|---|
1.புரபுக்கல்(noblity) | -ஸ்பேட் |
2. குருமார்கள் (Clergy) | -ஹார்ட் |
3. வியாபாரிகள் (Merchants) | -டைமண்ட் |
4. உழவர்கள் (Peasants) | -கிளப் |
சீட்டுப் பிரிவுதான் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்று பார்த்தால் சீட்டுக்களில் உள்ள படங்களும் மிகப் பெரிய மனிதர்களின் திருவுருவங்களைத் தாங்கிக் கொண்டல்லவா பெருமை பெற்றிருக்கின்றன? எந்தப் படங்கள் எந்தப் பெரிய மனிதர்கள் என்பதை இனி காண்போம்.