பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொகை

தொல். சித்தாந்தமும்


 கூடியதால், நூல்களின் சேர்க்கையான ஆடையும் அவ்வாறே எளிதில் அறுபடும் என்று கொள்ளுதல்,

தொகை - 1) தொகுதி, கூட்டம் 2) இது மந்திரம் 11, பதம் 81, வன்னம் 51, புவனம் 224, தத்துவம் 36, கலை 5

தொகை அடியார்கள் - தொகுதியாக உள்ளவர். இவர் ஒன்பதின்மர். 1) தில்லை வாழ் அந்தணர் 2) பொய்யடிமை இல்லாத புலவர் 3) பத்தராய்ப் பணிவார் 4)பரமனையே பாடுவார். 5) சித்தத்தைச் சிவன் பாலே வைத்தார் 6)திருவாரூர்ப் பிறந்தார் 7) முப்போதும் திருமேனி தீண்டுவார் 8)முழு நீறு பூசிய முனிவர் 9)அப்பாலுமடிச் சேர்ந்தார். பா. தனி அடியார்.

தொகை ஆறு - ஆறு கொண்டது.

தொகை உவமம் - உவமானம் உவமேயம் இரண்டிலும் பொது அறம் தொக்கு நிற்பது எ-டு 'எங்குமுளன் என்ற அளவை” என்னும் சிவஞானபோத வெண்பா 15 பொன் ஒளிபோல் ஈசன் என்னும் உவமானம் உவமேயம் இரண்டினும் அவ்விரண்டினுக்கும் பொதுத் தன்மையாகியது பிரிக்க முடியாமை தொக்கு நிற்பது.

தொகை நாலிடை - நான்கு கொண்டது.

தொகை நிலைச் சொல் - உருபு முதலியவை தொக்கு நிற்கும் சொல்.

தொகைப் பொருள் - பிண்டப் பொருள்.

தொடர்புக் கொள்கை - இணைப்புக் கொள்கை மெய்யறிவுக் கொள்கையில் ஒரு வகை.

தொடர்முறை - நூற்பாவில் எழுவாய் தொடர்படுத்திக் கூறப்படுவது பற்றிய ஒழுங்கு

தொடுதல் - தோண்டுதல்

தொண்டர் - அடியார்.

தொண்டு - அடியவர் பணி.

தொண்ணுற்று அறுவர் - உடலிலுள்ள தத்துவக்குப்பைகள் 96 (36+60).

தொத்து - மலப்பிணைப்பு

தொல்காப்பியம் - பண்டைத் தமிழ் இலக்கண நூல்களுக்கு முற்பட்ட முதல் தமிழ் இலக்கண நூல். ஆசிரியர் தொல்காப்பியர் இதில் இறையாகிய சிவம் பற்றிப் பேசப்படுகின்றது. கடவுள், அறிவன், முனைவன் என்னும் சொற்கள் கையாளப்படுகின்றன. கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே (புறத் 85) 26 வினையின் நீங்கி விளங்கிய அறிவன் முனைவன் (மரபியல் 96) வினை பற்றியும் பேசப்படுகிறது. வினையே பூதம் (தொல், களவியல்; 21; 17)

தொல்காப்பியமும் சைவசித்தாந்தமும் - மறை ஞான தேசிகர் இதனை ஓர் அளவை நூலாகக் கொள்கின்றார். மொழி இலக்கணத்தைக் கொண்டு உலக இலக்கணத்தை அவர் தம் மதிநுட்பத்தால் தெளிவுபடுத்துவது கருத்திற்கு விருந்து இந்நூல் சித்தாந்தக் கருத்துகளுக்கும் இடமளிக்கிறது.

162