பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

நாம் இன்று பிள்ளைப் பூச்சிகளாய், முதுகெலும்பற்ற கோழைகளாய் போனதன் காரணம் சிந்தனையை மழுக்கிவிட்ட அறிவுக்குத் திரை போடுகிற மூடபக்தி தான்.

'மதம் மக்களுக்கு அபின்' என்றான் சிந்தனையாளன். இந்த போதை ரத்தத்திலே ஊறி மனிதவர்க்கத்தை அசக்தர்களாக்கிவிட்டது , அதை மாற்ற சிந்தனை 'இன்ஜெக்க்ஷன்' தேவை.

அதற்கு முக்கிய ' ஆப்ரேஷன்' தான் அறியாமையின் வளர்ப்புப் பண்ணையான, விபச்சார விளைநிலம், புரோகிதத்தைப் போஷித்து சுயநலமிகளை மாமிசக் குன்றுகளாக்கும் சாப்பாட்டுப் பள்ளிகளான கோயில்களை மூடுவது.

ஆம், ஆரோக்கியத்தைக் கெடுக்கும் அந்தகாரக்கோட்டைகளான ஆலயங்களை இழுத்து மூடுங்கள்!

ஏழையை இன்றும் ஏழையாக்கும், அறிவற்ற சமுதாயத்தை மேலும் அறிவற்ற தாக்கும், கோயில்களை மூடுங்கள்!

அடியுங்கள் சாவுமணி - அறியாமைக்கு, அராசாரத்துக்கு, அடிமைத்தனத்துக்கு, ஏழ்மைக்கு, சுரண்டலுக்கு, புரோகிதத்துக்கு!