பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டு நடப்புகளைப் பற்றியும், உலகின் பல பகுதிகளில் நிகழ்கிற நிகழ்ச்சிகள் பற்றியும் அறிந்து கொள்ள மக்கள் ஆசைப்படுகிறார்கள்.

படிக்கத் தெரிந்தவர்களின் அவாவைத் தணிக்க முயல்கின்றன செய்திப் பத்திரிகைகள்.

யுத்தங்கள், சுதந்திரப் போராட்டங்கள், மற்றும் முக்கிய நிகழ்ச்சிகள் குறித்து ஓரளவுக்காவது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை, மக்களிடம் செய்திப் பத்திரிகை படிக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துகிறது.

படிக்கத் தெரியாதவர்கள் கூட, பத்திரிகைகள் படிப்பவர்களிடம், இன்னிக்கு பேப்பர்லே என்ன விசேஷம்?’ என்று கேட்டுத் தெரிந்து கொள்வதில் அக்கறை காட்டுகிறார்கள்.