இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
40. தந்தையைச் சிறைமீட்ட மைந்தன்
1. இளமைப் பருவம்:
சீர்மிகுந்த பேர்மிகுந்த
செஞ்சிநகர் மன்னன்
யார்வரினும் அஞ்சாத
ஆண்மையுள்ள மன்னன்.
1
ஜயசிங்கு ராஜனென
ஜகம்புகழும் வீரன்
தயவுள்ள வேந்தனவன்
சண்டையிலும் தீரன்.
2
முன்புபுரி நற்றவத்தால்
முகம்மதுகான் என்பான்
இன்புடனே இளமையினில்
அன்புகொள்ள வந்தான்.
3
54