பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தாழங் குடையல்லவோ !
தள்ளாடும் நடையல்லவோ !
மாலைப் பொழுதல்லவோ !
வண்டாடும் செண்டல்லவோ!...”

இந்தத் தருணத்தில் திருமதி பி. சுசீலா பாட, நாம் கேட்கவேண்டும்.

சரி: பாட்டைப் படியுங்கள்: பாடாதீர்கள்!

பாடும்பொழுது குரலைக் கேட்கிறோம். யார் குரலை, தெரியுமா? பாடுபவரின் குரலை. ஆனால் படிக்கும்போது, பாப்புனைந்தவர் குரலை நம்மால் படிக்க முடிகிறது.

இந்தத் திரைப்பாடலில் கவிஞர் சாதித்தது என்ன?

சிறுமியை எதெதற்கோ உவமை காட்டிப் போற்றுகிறார்; புகழ்கிறார். குழந்தைத் தெய்வத்தின் சிறப்பியல்புகளைச் சுட்டிச் சுட்டிப் பேசுகிறார்.

ஒரு விஷயம்:

“கவிஞர் கண்ணதாசனை ரசிப்பதற்கு மனம் வேண்டும்; படிப்பும் பக்குவமும் வேண்டும்!” என்று நான் குறித்துக் காட்டியிருந்தேன்.

கவிஞருக்கும் எனக்கும் பழக்கமுள்ள திரையுலகப் பிரமுகர் ஒருவர் இவ்வரிகளைப் பாராட்டியிருக்கிறார்.

14