பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

lவல்லிக்கண்ணன் - 鬆 89 இவ்வாறு பத்தயத்தினுள் அகப்பட்டுக் கொண்டு தவிக்கும் எலி கள் மாதிரிக் கிடந்த அவர்களுடைய வீடு அடக்கமான பாதுகாப்பு-நல்லதொரு அரண்-சுகமான தங்குமிடம் எனும் தகுதியை இழந்து பயங்கரமான சிறை மாதிரி-எந்த நேரத்திலும் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய இடிந்த கோட்டை மாதிரித்தான் இருந்தது. அதனுள் நெருப்பின் மீது அமர்ந்து விட்டவர்கள் போல் துயர் அனுபவித்துக் கொண்டிருந்த என்ன நேரும் என்று தெரியாத போதிலும் எதையோ எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் போல்சிரமப்பட்டுக் கொண்டிருந்த - அவ்விருவரின் இதயத்தின் மீது விழுந்த பலத்த அடிப்போல். வயிற்றில் விழுந்த நெருப்புத் துண்டுப் போல், கதவின் மேல் விழுந்தது கனத்த உதை "ஏய், உள்ளே யாரு?" என்ற உறுமல் தொடர்ந்தது.

அவள் சுவரோடு சுவராகிவிட ஆசைப்பட்டவள் மாதிரி மூலைக்குள் முடங்கினாள். அவன் மிரள மிரள விழித்தான்.

தொடர் இடி எனச் சட சடத்தது கதவின் மேல் விழுந்த தாக்குதல். "மரியாதையாகக் கதவைத் திறக்கிறீங்களா இல்லியா? நாங்களாத் திறந்து கொண்டு உள்ளே வந்தால், அப்புறம் அவ்வளவுதான் உள்ளே இருக்கிறது யாராயிருந்தாலும் சரி-எத்தினி பேராயிருந்தாலும் சரி - குளோஸ்தான். ஒரே போடு மண்டையைக் குழைச்சு மாவிளக்கு ஏத்திப் போடுவோம். ஆமா" என்ற பயமுறுத்தல் அழுத்தமாய், கனமாய், வெறிவேகத்தோடு வந்தது.

விளக்கு மங்கலாக எரிந்து கொண்டுதான் இருந்தது.ஆயினும் பேய்த்தனமான கும்மிருட்டு, தாங்க முடியாத தள்ளி விலக்கிடவும் முடியாத - பாரம் மிகுந்த போர்வை மாதிரித் தங்கள் மீது கவிந்து, தங்களையே அமுக்கி திக்குமுக்காடச் செய்வதாக உணர்ந்தார்கள் அவ்விருவரும். :

கதவு பலமான தாக்குதலை ரொம்ப நேரமாகத் தாங்கி நிற்க முடியாமல் நிலைகுலைந்து இற்று வீழ்ந்தது. திடீரென்று ஏற்பட்ட வழியினூடாகக் காற்று வேகமாகப் பாய்ந்ததும் அவளுடைய தேகம் சிலிர்த்து நடுங்கியது. அது காற்றினால் மட்டுமே ஏற்பட்டதன்று.

இடிந்து சிதறிய வாசலின் நடுவே நிமிர்ந்து நின்றது மனித உருப் பெற்றிருந்த மிருகம் பிரகாசம் இல்லாத ஒளியில் அது நெடிதுயர்ந்து