இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாடொரு பாட்டெனக் கேட்ட அளவினில்
- பண்ணமிழ் தூட்டினையே - அடி
நாடொறும் அவ்விசை நல்கி எனை உனில்
- நல்லின்பம் கூட்டாயோ? பூக்
காடமர் பொற்குயில் காலம் தவறி ஓர்
- காலத்தில் பாடாதே - அதற்
கீடெனச் சொல்லிடில் அவ்விசைச் சொற்பொருள்
- ஏந்தி இசைப்பதுண்டோ ?
தேனார் இசைக்கடல் சீத ஒளிபொழி
- தேன்மதி கண்டது போல் - பொழிற்
கானாற் றமிழ்திசை கல்லொடும் பூவொடும்
- காதல் மொழிதரல்போல் - மணப்
பூநாடிக் கள்ளுணும் பொன்வண்டினமுரல்
- பொங்கிடும் யாழ் இசைபொல் - அடி
மானே இளங்குத லைமொழி இன்னிசை
- மண்டி மயக்கும் எனை !