பக்கம்:தமிழ்த் திருநாள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3. இன்னமும் உறங்குவது ஏன்?
எடுப்பு

இன்னமும் உறங்குவ தேன்-எந்தமிழா

(இன்னமும்)
உடன் எடுப்பு

உன்னிலு மேயன்று ஊக்கம் குறைந்தார்

உலகி லேயின்று ஆக்கம் நிறைந்தார் (இன்னமும்)

அடிகள்

நந்தம துமொழி நயம்பல நல்கும்

செந்தமிழ் மொழியெனும் செருக்கி னாலோ?

நந்தம துகாடு நலம்பல மல்கும்

செந்தமிழ் நாடெனும் சிறப்பி னாலோ?

(இன்னமும்)

இந்தியா முழுமையும் இமய வரம்பன்

செந்தமி ழால் ஆட்சி செய்ததை நினைத்தோ?

நந்தலில் இமய நளிமலை தன்னில்

பைந்தமிழ்க் கொடியன்று பறந்ததை நினைத்தோ?

(இ)

அன்றைக் கிருந்தகம் ஆற்றலே அறிவாய்

இன்றைக் குறங்கியே இருப்பதும் தெரிவாய்

கன்றுக்குப் பாலின் றிக் கறப்பவர் போலே

என்றைக்கும் ஏய்ப்பவர் இருப்பார்கள் மேலே

(இ)
4. தலைநிமிர்வாய் தமிழா!
எடுப்பு
தலைநிமிர்வாய் தமிழா-தண்
கலைபல வளர்த்தே
(தலைநிமிர்)
உடன் எடுப்பு

மலையாம் மார்பும் மயங்கா நெஞ்சும்

குலையா நோக்கும் கொண்டுசிங் கம்போல்

(தலைநிமிர்)

6