பக்கம்:காளிதாசன் உவமைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

காளிதாசன் உவமைகள்


நெற்றிக்கண்ணைத் திறந்த சிவபெருமானால் உமையின் கண் எதிரே சாம்பலாகி வீழ்ந்தான் மன்மதன். பயத்தால் நடுங்கிய உமை கண்களை மூடி மயங்கிக் கிடந்தாள். உமையின் தந்தையாகிய இமவான் மயங்கிக் கிடந்த மகளைத் தூக்கித் தன் தோளில் போட்டுக்கொண்டு, மலைச் சிகரங்களுக்கு இடையில் தன் இருப்பிடம் நோக்கி நடந்தான். அந்தக் காட்சி விண்ணில் உள்ள யானை ஒன்று கீழே இழிந்து, தாமரை மலரை நாளத்துடன் தன் கொம்பிடை ஏந்தி, நீண்ட உடலோடு, நெட்டடிகளை எட்ட வைத்து, தன் வழியே செல்வது போல இருந்தது. கு. 73.9

காட்டில் ஒரு மரம், அருகில் இருந்த கொடி மரத்தில் படர்ந்தது. நாளடைவில் கொடியும் மரப்படையில் வேரூன்றி மரத்தைச் சூழ்ந்தே வளர்ந்தது.

ஒரு நாள் பெரிய யானை ஒன்று காட்டு மரங்களை விளையாட்டாக ஒடித்துத் தள்ளியது. அம்மரத்தையும் வீழ்த்தியது. அம் மரத்தை அண்டி இருந்த கொடிகளின் கதி என்ன?

ரதி சிவனிடம் கேட்கிறாள்: “காமனை நீ அழித்தது பாதி அழிவே; அவனை அன்றிக் கதி வேறில்லாத என்னையும் அழித் தாலன்றோ அழிவு முடிவுறும்?” கு. 4:31

சுருக்க - விளக்கம்

கு - குமார சம்பவம்
சா - சாகுந்தலம்
மா - மாளவியாக்கியம்
மே - மேகதூதம்
ர - ரகுவம்சம்
வி- விக்ரம ஊர்வசியம்