பக்கம்:வாழும் வழி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

123


இருப்பதில்லை. சில செடிகளில் ஒரு கிளையிலுள்ள ஒரு பூவில் ஆண்பாகமாகிய கேசரம் மட்டும் இருக்கும். அதற்கு ஆண் பூ என்று பெயராம். அதே அல்லது வேறு கிளையிலுள்ள பூவில் பெண்பாகமாகிய அண்டகோசம் மட்டும் இருக்கும்; அதற்குப் பெண் பூ என்று பெயராம். பூசணி, பாகல், குப்பைமேனி, ஆமணக்கு முதலியவை இந்த வகையைச் சேர்ந்தவை. இத்தகையவற்றை , ‘துவிலிங்கச் செடிகள்’ என்பர். தமிழில் ஈரினப் பூஞ்செடிகள் என்று நாம் சொல்வோம்.

ஓரினப் பூஞ்செடிகள்

வேறு சில வகைகளில், ஒரு செடியிலோ அல்லது கொடியிலோ ஏதாவது ஓரினப் பூ மட்டுந்தான் இருக்கும். அதாவது, கோவைக் கொடியை எடுத்துக்கொள்வோம். ஒரு கோவைக் கொடியில் ஆண்பூக்கள் மட்டுமே இருக்கும். இன்னொரு கோவைக் கொடியில் பெண் பூக்கள் மட்டுமே இருக்கும். ஆண் பூ பெண் பூ என்று சொல்வதற்குப் பதிலாக, ஆண்பனை - பெண்பனை என்பதுபோல, ஆண்கோவை-பெண்கோவை என்றே சொல்லிவிடலாம். இத்தகையனவற்றை ‘ஏகலிங்கச் செடிகள்’ என்பர். தமிழில் ‘ஓரினப் பூஞ்செடிகள் அல்லது கொடிகள்’ என்று சொல்லலாம்.

மகரந்தச் சேர்க்கை

ஒரே பூவில் ஆண்பாகமும் பெண்பாகமும் இருந்தால், ஆண்பாகத்திலுள்ள மகரந்தத்துணுக்குகள் பெண்பாகத்தோடு தொடர்புகொண்டு, கருவுற்று, காய் காய்ப்பது தன்னில்தானே இயற்கையாக நிகழும். இதற்குத் ‘தன் மகரந்தச் சேர்க்கை’ என்று பெயராம். ஆண்பூவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/125&oldid=1111820" இலிருந்து மீள்விக்கப்பட்டது