பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாலாட்டுப் பாடல்கள்

75


செங்காந்தளின் அரும்போ சின்னவிரல்?
அவ் விரலை
அங்காந்த வாயால் அமிழ்தாக
உண்கின்றாய்.

கொங்கை அமிழ்து புளித்ததோ
கூறென்றால்
தெங்கின்பாளைச்சிரிப்புத் தேனை
எமக்களித்தாய்.

பஞ்சுமெத்தைப் பட்டுப் பரந்தொரு
மேல்விரிப்பில்
மிஞ்சும் மணமலரின் மேனி
அசையாமல்

பிஞ்சுமா வின்விழியைப் பெண்ணே
இமைக்கதவால்
அஞ்சாது பூட்டி அமைவாகக்
கண்ணுறங்காய்

.

குடும்பவிளக்கு - 4


தங்கத்துப் பாட்டி தாலாட்டு


ட்டனத்தி யான அருமை
மணாளனையே
ஓட்டப் புனற்கன்னி உள்மறைத்துக்
கொண்டுசெல்லப்