பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

பாரதிதாசன்


11. திருமலை முருகன் தாலாட்டு.

(20ஆம் நூற்றாண்டு. 101 கண்ணிகள் ஆசிரியர் தென்காசி வன்னியப்பன்.)

கந்தா திருமலையிற் காலமெலாம் வீற்றிருக்குஞ்
சிந்தா மணியான செல்வமேநீ கண் வளராய்.

தொட்டி அசைந்தாடத் தோகைமார் தாலாட்ட
சுட்டியசைந்தாடச் சுந்தமே கண்வளராய்.

ஆதி குறுமுனிக்கு அருள் கொடுக்க வந்தவனே
நீதி யுடையவனே நீலமயில் வாகனனே.

கார்த்திகைப் பெண்களுமே கனிந்துன்னைத்
தாலாட்டப்
பூர்தியாய்க் கேட்டுகந்த பூரணனே கண்வளராய்.

12. நால்வர் தாலாட்டு.

(20ஆம் நூற்றாண்டு. சைவசமயாசாரியர் நால்வர் மீதும் தனித்தனி 12 கண்ணிகள் கொண்டது. பாடல்கள் அவரவர் வரலாற்றைக் கூறுவன.)

சம்பந்தர் :

மேலாம் சிவபாத இருதயர்நீ ராடுகையில்
நாலாரணம் துதிக்கும் நாயகிபால் உண்டவனோ.

அருஞானம் ஆருயிர்கட் களிக்கஉல
கினில் உதித்துத்
திருஞான சம்பந்தர் சீர்பேர்கொள் சின்மயனோ.