பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தருகிறர்கள் என்பதை நம் கவிவாணர்கள் புதுப் புது வழிகளில் காட்டியிருக்கிருர்கள்.

பாடல் :

“உயிர்க் கனலில்
மையலெனும்
உருகிய நெய்
ஊற்றியுடல்
செயற்கரிய
நலமுயிர்க்குச்
செய்வதற்காந்
திறல்தருவாள்!...”

புகழ்பெற்ற கதாசிரியர் எம். வி. வெங்கட்ராம் அவர்கள் அங்கு ‘தெய்வத் தன்மைமிக்க மனோஹரி’யாளைப் பற்றிக் கொண்டாட்டத்துடன் பாப்புனைந்திருக்க, தெய்வம்நிகர்ப் பாவையைப்பற்றிக் கவிஞர் ‘மணிவண்ணன்’ இங்கு குரல்தர முனைகின்றார்:

“பெண்ணென்று பேர் சொல்லி,

முகிலினிடை

மின்னென்று வந்ததெனத்

தனிவந்து

கண்ணென்று முகமென்று

பனியொத்த

தண்ணென்ற கையென்று

வாயென்று

மெய்ந்நின்ற ஏழில்கொள்ள

முழுவடிவின்

58