பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆஹா! வாழ்க்கையைப் பற்றித்தான் எவ்வளவு அழகழகான கருத்துக்கள் உலவி வருகின்றன!

புண்ணிய பூமியிலே, நட்டநடு நிசிக்கு ஊடே, மண்டை ஓடுகளுக்கு மத்தியில் வாழ்க்கையை நடத்தும் ‘கம்பளத்தான்’ இருக்கிறான் பாருங்கள், அவனுக்கு இந்தப் பொய்யான வாழ்க்கையைப் பற்றி அக்கறையில்லை. ஆனால் அவனுக்கு இருக்கக்கூடிய அக்கறை-கவலையெல்லாம் அவனது சாண் வயிற்றைப் பற்றித்தான்!- அதற்காகத்தான் அவன், பூவுலகில் உயிர்வாழும் ஏனைய மக்களைப்பற்றி அக்கறைப்பட்டு, இல்லாததையும் பொல்லாததையும் இண்டு இடுக்கு வைக்காமல் அலசி விளாசித் தீர்த்துவிட்டதாக நடித்து, தன்னுடைய பசியையும் தீர்த்துக் கொள்கிறான்.

மனிதன் நடிக்கிறான். ஆகையால்தான், ஆண்டவன் வாழ்க்கையையும் கூத்தாக்கி விட்டானோ?

ஒரு விவரம் சூடு காட்டுகிறது.

உங்களுக்குத் தெரியாததல்ல.

நாடக மேதை ஷேக்ஸ்பியர் (William. Shakespeare) சொன்னதுதான்: “உலகமே ஒரு நாடக அரங்கு. அதில், ஆண்களும் பெண்களும் நடிக-நடிகையர்கள். அவர்களுக்கு நுழை வாசல்-

22