பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முறை சொன்னார்கள்: “நான் விரும்பிப் படிப்பவர்களிலே. முதல்வர் பாரதிதாசனார்: அடுத்தவர் கண்ண தாசன்!”

கவிஞனை கவிஞன்தான். புகழ்வான்: புகழ முடியும்.

ஆனால் நம் அருமைத் தமிழ் மண்ணுக்கு வாய்த்திட்ட நற்பேறுகளில் இக்குணமும் ஒன்றென அமையவல்லது என்பதற்கு உதாரணம் சொல்லி விட்டார் பட்டுக்கோட்டைக் கவிஞர். அவரும் நானும் அடிக்கொரு முறை சந்திப்போம். பாடுவார்; ரசிப்பேன். “விதி எனும் குழந்தை விளையாடி விட்டது!.....” என்று ஓர் அடி.‘தங்கப்பதுமை’க் கெனப் பாப்புனைந்த நினைவு. அதுசமயம், அவர்மடியில் அவரது உயிர்ச் செல்வம் தவழ்ந்து கொண்டிருந்தது. எச்சில் ஊறும் பாலமுதச்சிரிப்பு. அவர் முத்தம் ஈந்தார். எச்சிலில் எச்சில் ஊர்ந்தது. சிரித்தார்: சிரித்தேன். எச்சிற் றத்துவத்திற்கு வாய்த்திட்ட , நடு நாயகத் தன்மையாக விளங்கிப் பொலிவு காட்டுவது குழந்தை

விதியின் விளைவாகக் குழந்தை காட்சி தரும் பொழுது, இதே குழந்தையே விதியின் வினை யாகவும் காட்சி தரக்கூடும் அல்லவா?

“குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தே,” என்கிறோம். மெய்தான். இம்மொழியில்,

12